sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தமிழில் பெயர்ப்பலகை எழுத தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்

/

தமிழில் பெயர்ப்பலகை எழுத தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்

தமிழில் பெயர்ப்பலகை எழுத தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்

தமிழில் பெயர்ப்பலகை எழுத தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்


ADDED : நவ 07, 2024 08:35 PM

Google News

ADDED : நவ 07, 2024 08:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; அனைத்து நிறுவனங்கள், கடைகளின் பெயரை முதலில் தமிழில் எழுத வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை, தொழிலாளர் கூடுதல் கமிஷனர் சாந்தி மற்றும் இணை கமிஷனர் லீலாவதி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, உதவி கமிஷனர் தலைமையில், மாவட்டம் முழுதும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தொழிலாளர் நல சட்டங்களை மீறிய 250 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

மறு முத்திரையிடப்படாத எடை அளவுகள், எடை குறைவு, சோதனை எடைக்கற்கள் இல்லாதது தொடர்பாக 32 கடைகள், அதிகபட்ச சில்லறை விற்பனையை விட கூடுதல் விலைக்கு விற்பனை, விலை பட்டியல் தொடர்பாக 7 கடைகள், குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 2 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பெயர்ப்பலகை


அனைத்து நிறுவனங்கள், கடைகள் தங்களது பெயர்ப் பலகையில் முதலில் தமிழில் எழுத வேண்டும். பின்னர் ஆங்கிலம், அவரவர் விரும்பும் பிற மொழிகளில் பெயர்ப்பலகைகளை வைத்துக் கொள்ளலாம்.

புலம்பெயர் தொழிலாளர் விவரங்களை labour.tn.gov.in/ism என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை 1098 என்ற எண்ணிலும், கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் புகார்களை 1800 4252 650 மற்றும் 155214 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us