/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதிகள் இல்லை; சுற்றுலா பயணியர் பரிதவிப்பு
/
அடிப்படை வசதிகள் இல்லை; சுற்றுலா பயணியர் பரிதவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லை; சுற்றுலா பயணியர் பரிதவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லை; சுற்றுலா பயணியர் பரிதவிப்பு
ADDED : ஜூலை 14, 2025 08:01 PM
வால்பாறை; வால்பாறையில் உள்ள சுற்றுலா பகுதிகளில், அடிப்படை வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் சுற்றுலா பயணியர் மனம் கவர்ந்த பல்வேறு இடங்கள் உள்ளன. குறிப்பாக, அட்டகட்டி வியூபாயின்ட், ஆர்க்கிட்டோரியம், கவர்க்கல் வியூபாயின்ட், சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சி முனை, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நெம்பர் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இங்கு, சுற்றுலா பயணியர் சென்று வர வனத்துறை சார்பில், 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர,நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள படகுசவாரியில் பயணம் செய்ய, 40 ரூபாய் கட்டணமும், பூங்காவை கண்டு ரசிக்க, 20 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சுற்றுலா தலங்களில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
சுற்றுலா பயணியர் கூறியதாவது:
பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணியர் அதிகளவில் வால்பாறை வருகின்றனர். சுற்றுலா தலங்களில் எவ்வித அடிப்படை வசதியும் வனத்துறை சார்பில் செய்து தரவில்லை. குறிப்பாக, கழிப்பிட வசதி கூட இல்லை.
கட்டணம் வசூலிப்பதில் மட்டும் தீவிரம் காட்டும் வனத்துறையினர், அந்தப்பகுதியில் அடிப்படைவசதிகள் ஏற்படுத்த தொடர்ந்து தயக்கம் காட்டுகின்றனர்.வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில், கரடு, முரடான ரோட்டை சீரமைத்து, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.