sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விடிய விடிய மண் கடத்தல்

/

விடிய விடிய மண் கடத்தல்

விடிய விடிய மண் கடத்தல்

விடிய விடிய மண் கடத்தல்


ADDED : ஆக 10, 2024 12:49 PM

Google News

ADDED : ஆக 10, 2024 12:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: கோவை மாவட்டத்தில், 62 குளம், குட்டைகளில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் உற்பத்தி செய்பவர்கள், இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம் என கோவை கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு வருவாய் துறையில் விண்ணப்பித்து விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு குறிப்பிட்ட அளவு மண் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அன்னூர் ஒன்றியம், காரேக்கவுண்டன்பாளையம் ஊராட்சி, கெம்பநாயக்கன்பாளையத்தில் 85 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் விடிய விடிய மண் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. அரசு அதிகாரிகள் முன்னிலையில் தான் மண் எடுக்க வேண்டும். ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டும் எடுக்க வேண்டும் உள்ளிட்ட விதிகளை புறந்தள்ளி மண் எடுக்கின்றனர். இதனால் குளத்தில் நீரோட்டம் பாதிக்கிறது. குளத்தில் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us