/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24வது நாளாக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
24வது நாளாக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : டிச 30, 2025 05:17 AM
அன்னூர்: வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு முடிவின்படி, 'இ பைலிங்' கில் உள்ள குறைபாடுகள் வக்கீல்களை வெகுவாக பாதிக்கிறது. இதனால் 'இ-பைலிங்' முறையை சரி செய்யும் வரை அனைத்து வழக்குகளுக்குமான கட்டாய 'இ பைலிங்' முறையை அமல்படுத்தியதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, அதுவரை அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்தும் விலகி இருப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, அன்னூர் கோர்ட்டில், 24வது நாளாக, நேற்றும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.
அன்னூர் வக்கீல்கள் கூறுகையில், 'ஜன. 7ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முன் நடைபெறும் முற்றுகை போராட்டத்தில், அதிகளவில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

