/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலம் கட்டுவதில் மெத்தனம்; கார் மீது விழுந்தது கான்கிரீட் கல்
/
மேம்பாலம் கட்டுவதில் மெத்தனம்; கார் மீது விழுந்தது கான்கிரீட் கல்
மேம்பாலம் கட்டுவதில் மெத்தனம்; கார் மீது விழுந்தது கான்கிரீட் கல்
மேம்பாலம் கட்டுவதில் மெத்தனம்; கார் மீது விழுந்தது கான்கிரீட் கல்
ADDED : டிச 05, 2024 05:07 AM

கோவை : கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை, 10 கி.மீ.,க்கு, மாநில நெடுஞ்சாலை துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது.
ஹோப்ஸ் காலேஜ் பகுதியில், பக்கவாட்டு சுவர் கட்டுவதற்கு கான்கிரீட் கலவை ஊற்றுவதற்கான ஏற்பாடுகளை, கட்டுமான தொழிலாளர்கள் நேற்று முன்தினம் செய்தனர். அதற்காக, மேம்பாலத்தின் மேற்பகுதியை தயார் செய்து கொண்டிருந்தபோது, மேலிருந்து கான்கிரீட் கல் பெயர்ந்தது.
அப்போது அவ்வழியாக வந்த, டி.என். 38 டி.எச்., 4700 என்ற பதிவெண் கொண்ட கார் மீது கல் விழுந்தது. மேலிருந்து விழுந்த வேகத்தில், கண்ணாடி நொறுங்கியது.
அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டுமான தொழிலாளர்களின் அஜாக்கிரதையால், இச்சம்பவம் நடந்துள்ளது. வாகன ஓட்டிகளிடம் இது, அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநில நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனியிடம் கேட்டதற்கு, ''பிரிகாஸ்ட் முறையில் மேம்பாலம் கட்டப்படுகிறது.
''மையத்தடுப்பு மற்றும் பக்கவாட்டு தடுப்புச்சுவர் கான்கிரீட் போடப்படும். கான்கிரீட் பாக்ஸ் இணைப்பு பகுதியில் ஒரு கல் இருந்துள்ளது.
''இடைவெளி வழியாக கார் மீது கல் விழுந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட காரை, சாலை மேம்பால ஒப்பந்த நிறுவனத்தினர் சரி செய்து கொடுப்பர். ஒப்பந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்,'' என்றார்.
இந்த கட்டுமானத்தின் போது, அவசியமாக கட்ட வேண்டிய வலையை, போக்குவரத்து மிகுந்த அந்த பகுதியில் கட்டவில்லை