/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கன்று குட்டியை தாக்கிய சிறுத்தை
/
கன்று குட்டியை தாக்கிய சிறுத்தை
ADDED : அக் 10, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை : ஆனைமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதியில், வனவிலங்குகள் அவ்வப்போது வந்து செல்கின்றன.
இந்நிலையில், புளியங்கண்டியை சேர்ந்த சுபாஷினி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், நேற்றுமுன்தினம் இரவு நாய்கள் குறைக்கும் சப்தம் கேட்டது. வெளியே சென்று பார்த்த போது, கன்று குட்டியை சிறுத்தை தாக்கியது.
தோட்டத்தில் இருந்தோர் சப்தம் போட்டதால், சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. லேசான காயத்துடன் கன்று குட்டி தப்பியது.
தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

