/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழுநோய் கண்டறியும் பணி; வீடு வீடாக பரிசோதனை
/
தொழுநோய் கண்டறியும் பணி; வீடு வீடாக பரிசோதனை
ADDED : பிப் 03, 2025 11:42 PM

பொள்ளாச்சி; தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தில், பொது சுகாதாரத்துறை வாயிலாக, கோவை மாவட்டத்தில், வீடு வீடாகச்சென்று, தொழுநோய் பரிசோதனை மற்றும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனைமலை அருகே சுப்பேகவுண்டன்புதுார் ரயில்வே காலனியில், தொழுநோய் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லதுரை தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் அருணாசலம், சரத், கோகுல் மற்றும் களப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இப்பணியை மேற்கொண்டனர்.
வீடுகள்தோறும் நேரடியாகச் சென்று, உடலில் உணர்ச்சியற்ற தேமல் உள்ளதா என பரிசோதனை செய்தனர். தவிர, மக்களிடையே தொழுநோய் பாதிப்பு மற்றும் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், கணக்கெடுப்பும் நடத்தினர்.
புதிதாக ஒரு நோயாளி கண்டறியப்பட்டால் உயர் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும். தொழுநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால், அவர்களுக்கு, முறையான கூட்டு மருந்து சிகிச்சை வாயிலாக, நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் எனவும், அவர்கள் தெரிவித்தனர்.

