sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காலாண்டு 'லீவு' குறைவு; சிறப்பு வகுப்பில் குழப்பம்

/

காலாண்டு 'லீவு' குறைவு; சிறப்பு வகுப்பில் குழப்பம்

காலாண்டு 'லீவு' குறைவு; சிறப்பு வகுப்பில் குழப்பம்

காலாண்டு 'லீவு' குறைவு; சிறப்பு வகுப்பில் குழப்பம்


ADDED : செப் 23, 2024 10:48 PM

Google News

ADDED : செப் 23, 2024 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : காலாண்டு விடுமுறை குறைந்த நாட்கள் மட்டுமே அளிக்கப்படுவதால், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதில் குழப்பம் நீடிக்கிறது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது. வரும், 27ம் தேதி முதல், அக்., 2ம் தேதி வரை, ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நாட்களில், சனி, ஞாயிறு மற்றும் காந்திஜெயந்தி நீங்கலாக, வரும், 30ம் தேதி, அக்., 1 ஆகிய இரு தினங்களில் மட்டுமே வழக்கமான காலாண்டு விடுமுறையாக இருக்கும். அதனால், அந்த நாட்களில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.

கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், '10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்த, பல தலைமையாசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், குறைந்த தினங்கள் மட்டுமே விடுமுறை இருப்பதால், குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மட்டும் பள்ளிக்கு வரவழைக்க இயலாது. அதனால், சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாட்டில் குழப்பமான நிலை நீடிக்கிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us