நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; நல்லி செட்டிபாளையம், ஊர்ப்புற நூலகத்தில், 57வது நுாலக வார விழா நடந்தது. காரே கவுண்டன் பாளையம் ஊராட்சி செயலர் நாச்சிமுத்து தலைமை வகித்து, தமிழக அரசின் போட்டி தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும், என, விளக்கினார்.
வாசகர் வட்ட துணைத்தலைவர் சண்முகம், நிர்வாகி கோபாலகிருஷ்ணன், துவக்கப் பள்ளி ஆசிரியை மாலதி, போட்டி தேர்வு மாணவியர் மற்றும் வாசகர்கள் பங்கேற்றனர். விழாவில் சாந்தாமணி 1,000 ரூபாய் வழங்கி நுாலகத்தின் 23வது புரவலராக இணைந்தார். பள்ளி மாணவர்கள் 10 பேர் உறுப்பினராக சேர்ந்தனர். நுாலகர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.