/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு பகுதியில் சிங்கவால் குரங்குகள்; விரட்ட முடியாமல் தவிக்கும் மக்கள்
/
குடியிருப்பு பகுதியில் சிங்கவால் குரங்குகள்; விரட்ட முடியாமல் தவிக்கும் மக்கள்
குடியிருப்பு பகுதியில் சிங்கவால் குரங்குகள்; விரட்ட முடியாமல் தவிக்கும் மக்கள்
குடியிருப்பு பகுதியில் சிங்கவால் குரங்குகள்; விரட்ட முடியாமல் தவிக்கும் மக்கள்
ADDED : ஜூலை 21, 2025 10:14 PM

வால்பாறை; வால்பாறை குடியிருப்பு பகுதியில், உலா வரும் சிங்கவால் குரங்குகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன.
குறிப்பாக, பொள்ளாச்சி ரோட்டில் உள்ள புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால்குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் வனப்பகுதியில் கிடைக்கும் பழங்களை உணவாக உட்கொள்கின்றன. சமீபகாலமாக, வால்பாறை நகர், புதுத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சிங்கவால்குரங்குகள் தொழிலாளர் விடுகளிலும், நகரில் உள்ள கடை மற்றும் வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகின்றன. இதனால், வீடுகளின் கதவு, ஜன்னல்களை கூட திறந்து வைக்க முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.
குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிங்கவால் குரங்குகளை கட்டுப்படுத்த, வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில், புதுத்தோட்டம், அய்யர்பாடி ரோட்டில் சிங்கவால்குரங்குகள் அதிகஅளவில் நடமாடுகின்றன. வால்பாறை நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிங்கவால்குரங்குகளுக்கு, பொதுமக்கள் உணவு வழங்கக்கூடாது.
சுற்றுலா வருவோர் மலைப்பாதையில், மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். சிங்கவால்குரங்குகளுக்கு உணவு கொடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. மீறினால் வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.

