/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அளவில் கால்நடைகள் கணக்கெடுப்பு; 'மொபைல் ஆப்' வாயிலாக பதிவு
/
தேசிய அளவில் கால்நடைகள் கணக்கெடுப்பு; 'மொபைல் ஆப்' வாயிலாக பதிவு
தேசிய அளவில் கால்நடைகள் கணக்கெடுப்பு; 'மொபைல் ஆப்' வாயிலாக பதிவு
தேசிய அளவில் கால்நடைகள் கணக்கெடுப்பு; 'மொபைல் ஆப்' வாயிலாக பதிவு
ADDED : அக் 11, 2024 10:24 PM
பொள்ளாச்சி : தேசிய அளவில் கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், பொள்ளாச்சி உட்கோட்டத்தில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
கிராமப்புறங்களில், விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களுக்கு, துணை வருவாய் ஈட்டித்தருவது, கால்நடை வளர்ப்பு தொழிலாகும். சாதகமான தட்ப வெப்பநிலை மற்றும் அமைவிடம் காரணமாக, சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு, முதன்மை காரணியாக, கால்நடை வளர்ப்பு விளங்குகிறது.
கால்நடை பராமரிப்பில், மேலும் முன்னேற்றம் ஏற்படுத்த, கால்நடைகளின் முழுமையான புள்ளி விபரங்கள் தேவை. அதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய அளவில் கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கடந்த, 2019ம் ஆண்டைத் தொடர்ந்து, நடப்பாண்டு, கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, கால்நடைத்துறை பொள்ளாச்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட நகர் மற்றும் கிராமங்களில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கால்நடை உதவியாளர்கள் மற்றும் புள்ளிவிபரத் துறை அலுவலர்கள் வாயிலாக கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள், ஒவ்வொரு வீடாக நேரில் சென்று, 'மொபைல்ஆப்' வாயிலாக கால்நடைகளை கணக்கெடுப்பு செய்து பதிவு செய்ய உள்ளனர்.
அதாவது, ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும், பல்வேறு இன கால்நடைகளை பற்றி விபரங்கள் சேகரிக்கப்படும். அதில், சிற்றினம் வாரியான கால்நடைகளின் எண்ணிக்கை விபரங்கள், அவற்றின் வயது, பாலினம், பயன்பாடு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை துறை அதிகாரிகள் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.