/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடை செல்வம் பெருக உருவாரம் வைத்து வழிபாடு
/
கால்நடை செல்வம் பெருக உருவாரம் வைத்து வழிபாடு
ADDED : ஜன 18, 2024 12:47 AM

பொள்ளாச்சி : ஆனைமலை அடுத்த, காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவிலில், ஆண்டுதோறும் பூ பொங்கல் தினத்தன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
மாட்டுப் பொங்கல், பூப்பொங்கலை முன்னிட்டு கோவிலில், மாட்டேகவுண்டன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள், விவசாயிகள், ஆடு, மாடு உள்ளிட்ட தங்களது கால்நடைகளுக்கு நோய் தாக்காமல் இருக்கவும், கால்நடைகளால் செல்வம் பெருகவும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சிலர், ஆடு, கோழி, மாடு போன்ற உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர். கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தீர்த்தம், வீடுகள் மற்றும் தொழுவங்களில் தெளிக்கப்பட்டது. பூ- பொங்கலையொட்டி மாடுகளுக்கு அலங்காரம் செய்து, பூஜைகளும் செய்யப்பட்டது.