sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., 'அட்மிஷன்' இந்த வருஷம் சும்மா பிச்சுக்கிச்சு! 1,702 குழந்தைகளுடன் அபாரம்

/

மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., 'அட்மிஷன்' இந்த வருஷம் சும்மா பிச்சுக்கிச்சு! 1,702 குழந்தைகளுடன் அபாரம்

மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., 'அட்மிஷன்' இந்த வருஷம் சும்மா பிச்சுக்கிச்சு! 1,702 குழந்தைகளுடன் அபாரம்

மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., 'அட்மிஷன்' இந்த வருஷம் சும்மா பிச்சுக்கிச்சு! 1,702 குழந்தைகளுடன் அபாரம்


ADDED : ஜூன் 07, 2025 01:15 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்படும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., பிரிவுகளில், இதுவரை, 1,702 மாணவ - மாணவியர் சேர்ந்திருக்கின்றனர். மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு கீழ், 83 ஆரம்பப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 17 மேல்நிலைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன.

வழக்கமான புத்தகப் படிப்புகளுடன், மாணவ - மாணவியரின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பறை இசை, டிரம்ஸ் வாசித்தல், கராத்தே, செஸ், சிலம்பம், பரதநாட்டியம், கம்ப்யூட்டர் கல்வி உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகின்றன. அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகினறன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதோடு, மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

அதிகரிக்கிறது அட்மிஷன்!


இதன் காரணமாக, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பொதுத்தேர்வில் சாதித்த மாணவ - மாணவியருக்கு பரிசுத்தொகை, கேடயம் வழங்கப்படுகிறது.

மாநகராட்சியால் நடத்தப்படும், 19 நடுநிலைப்பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

நடப்பு கல்வியாண்டில் (2025-26) மேலும், 59 வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட்டன. இப்பள்ளிகளில், 607 மாணவர்கள், 631 மாணவியர் என, 1,238 மாணவ - மாணவியர் புதிதாக சேர்ந்திருக்கிறனர்.

1,702 மாணவ - மாணவியர்


ஏற்கனவே செயல்பட்டு வரும், 19 பள்ளிகளில், 247 மாணவர்கள், 217 மாணவியர் என, 464 பேர் சேர்ந்திருக்கின்றனர். மொத்தம், 1,702 மாணவ - மாணவியர், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., பிரிவில் சேர்ந்திருக்கின்றனர்.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 6,394 மாணவ - மாணவியர் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதுநாள் வரை, 8,096 பேர், மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்திருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதனால், கடந்த கல்வியாண்டை காட்டிலும், நடப்பு கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, அபரிமிதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us