sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டாம்கோ சார்பில் ரூ.6.72 கோடி கடன்: கலெக்டர் தகவல்

/

டாம்கோ சார்பில் ரூ.6.72 கோடி கடன்: கலெக்டர் தகவல்

டாம்கோ சார்பில் ரூ.6.72 கோடி கடன்: கலெக்டர் தகவல்

டாம்கோ சார்பில் ரூ.6.72 கோடி கடன்: கலெக்டர் தகவல்


ADDED : நவ 18, 2024 06:09 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ; தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்(டாம்கோ) வாயிலாக, 590 பயனாளிகளுக்கு, ரூ6.72 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள், சுயதொழில், மேற்கொள்ள குறைந்த வட்டியில், டாம்கோ வாயிலாக கடன் வழங்கப்படுகிறது.

தனிநபர், உதவிக்குழு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளில், டாம்கோ வாயிலாக மொத்தம், 481 பயனாளிகளுக்கு, ரூ.4.70 கோடி மதிப்பில் தனிநபர் கடன்களும், 205 பயனாளிகளுக்கு, ரூ.2.02 கோடி மதிப்பில் குழு கடன்களும் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் வாயிலாக, கடந்த மூன்று ஆண்டுகளில், 942 பயனாளிகளுக்கு, ரூ. 94.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 116 உலமாக்களுக்கு, ரூ.41.50 லட்சம் மதிப்பில், இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில், 705 பயனாளிகளுக்கு ரூ.62.29 லட்சம் மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 1,241 மாணவியருக்கு, ரூ.8.33 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us