sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலைஞர் கைவினைத் திட்டத்தில் 100 பேருக்கு கடன் ஒப்பளிப்பு ஆணை

/

கலைஞர் கைவினைத் திட்டத்தில் 100 பேருக்கு கடன் ஒப்பளிப்பு ஆணை

கலைஞர் கைவினைத் திட்டத்தில் 100 பேருக்கு கடன் ஒப்பளிப்பு ஆணை

கலைஞர் கைவினைத் திட்டத்தில் 100 பேருக்கு கடன் ஒப்பளிப்பு ஆணை


ADDED : ஜன 21, 2025 07:01 AM

Google News

ADDED : ஜன 21, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கலைஞர் கைவினைத் திட்டத்தில், கோவை மாவட்டத்தில், 100 பேருக்கு கடன் ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு, மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையமில்லா கடன் வழங்கவும், அவர்களின் சந்தைப்படுத்தும் திறனை மேம்படுத்தவும், தமிழக அரசு சார்பில், கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் கீழ், கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல் உட்பட, 25 வகையான பல்வகைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு, தொழில்திறன் சார் மேம்பட்ட பயிற்சியுடன், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில் புரிய ரூ.3 லட்சம் வரை, பிணையமில்லாமல் மானியத்துடன் கூடிய, கடனுதவி வங்கிகள் வாயிலாக வழங்கப்பட உள்ளது.

கடன் தொகையில், 25 சதவீதம் அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பி செலுத்தும் காலத்தில், 5 சதவீதம் வரை வட்டி மானியமாக வழங்கப்படும்.

திட்டத்தில், கோவை மாவட்டத்தில் இதுவரை, 475 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். நேர்முக தேர்வுக்கு பின், 296 பேர் பரிந்துரைக்கப்பட்டு, 100 பேருக்கு கடன் ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு, கடன் ஒப்பளிப்பு ஆணை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்தில், விண்ணப்பம் அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

- சிவா

பொது மேலாளர், மாவட்ட தொழில்மையம்.






      Dinamalar
      Follow us