sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாலாங்குளம் படகு இல்லத்துக்கு 'பூட்டு' அதிக கட்டண வசூல் ஆசைக்கு வேட்டு

/

வாலாங்குளம் படகு இல்லத்துக்கு 'பூட்டு' அதிக கட்டண வசூல் ஆசைக்கு வேட்டு

வாலாங்குளம் படகு இல்லத்துக்கு 'பூட்டு' அதிக கட்டண வசூல் ஆசைக்கு வேட்டு

வாலாங்குளம் படகு இல்லத்துக்கு 'பூட்டு' அதிக கட்டண வசூல் ஆசைக்கு வேட்டு


ADDED : ஜூலை 08, 2025 11:25 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 11:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: போதிய வருவாய் இல்லாததால், கோவை வாலாங்குளம் படகு இல்லத்தை மூட, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி குளம், குறிச்சி குளம் ஆகியவை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டன. மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து, வாலாங்குளத்தின் கரைப் பகுதியில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டது. இந்த படகு இல்லத்துக்கு வருபவர்களுக்கு வாகனங்களை நிறுத்த, போதிய இடவசதி இல்லை. படகு சவாரிக்கு வருவோருக்கு, கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை. தவிர, படகு சவாரிக்கான கட்டணமும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது.

பெடல் படகுகளை பயன்படுத்த, 30 நிமிடங்களுக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. துடுப்பு படகிற்கு ரூ.350, மோட்டார் படகுகளுக்கு ரூ.1,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனால், படகு சவாரிக்கு வருவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்தது. வார இறுதி நாட்களில் மட்டுமே கணிசமாக கூட்டம் இருந்தது. இருந்தும், வருவாய் குறைந்ததால், படகு இயக்குவோர், டிக்கெட் வழங்குபவர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளியாகும் கழிவுநீர், வாலாங்குளத்தையே அடைவதால், ஆகாயத் தாமரை சூழ்ந்து, படகு சவாரி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் படகு இல்லத்தை மூட, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இடத்தை மீண்டும் தங்கள் வசம் எடுத்துக் கொள்ள, கோவை மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us