ADDED : பிப் 21, 2025 02:50 AM
அ நிறம் | அளவு
கோவை:கோவை சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், மொபைல்போன்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
கோவையை சேர்ந்த, 17 வயது சிறுமி, கல்லுாரி மாணவர்களால் பிப்ரவரி 16ம் தேதி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
மாணவர்கள் ஏழு பேரை போலீசார் கைது செய்து, போக்சோவில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் மாணவர்கள் ஏழு பேரின் மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
ஆய்வுக்கு பின்னர், இந்த வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்புள்ளதா போன்ற விபரங்கள் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.
