/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாவட்டத்தில் செப்.13ல் லோக் அதாலத்
/
கோவை மாவட்டத்தில் செப்.13ல் லோக் அதாலத்
ADDED : ஆக 21, 2025 08:33 PM
கோவை; கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய லோக் அதாலத் விசாரணை, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார், அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் செப்.13ல் நடைபெற உள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், சிவில் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
லோக் அதாலத்தில், சமரச தீர்வு காண விரும்புவோருக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், நிரந்தர மக்கள் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி நாராயணன் தலைமையில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.