ADDED : செப் 12, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய 'லோக் அதாலத்' விசாரணை, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில், இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும், தேசிய 'லோக் அதாலத்' விசாரணையை, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா துவக்கி வைக் கிறார்.