sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! பேரூரில் ராஜராஜ சோழன் 1039வது சதய விழா

/

தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! பேரூரில் ராஜராஜ சோழன் 1039வது சதய விழா

தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! பேரூரில் ராஜராஜ சோழன் 1039வது சதய விழா

தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! பேரூரில் ராஜராஜ சோழன் 1039வது சதய விழா


ADDED : நவ 11, 2024 04:16 AM

Google News

ADDED : நவ 11, 2024 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர் : பேரூரில் ராஜராஜ சோழனின் 1039வது, சதய விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சோழ பேரரசில் முடிசூடி, வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த மாமன்னரும், தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவருமான ராஜராஜ சோழனின், சதய விழா ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோவிலில், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவாவடுதுறை ஆதீனத்தின் பேரூர் கிளை மடத்தில், 2019ம் ஆண்டு முதல், ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று ராஜராஜ சோழனின், 1,039வது சதய விழா, ஆறாம் ஆண்டாக, இயல், இசை, நாடகம் என, முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, ராஜராஜ சோழன் திருமேனிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, திருமஞ்சன வழிபாடு செய்யப்பட்டது. காலை, 11:00 மணிக்கு, ராஜராஜ சோழன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

தொடர்ந்து, ராஜராஜ சோழனின் பெருமைகள் குறித்து சொற்பொழிவு நடந்தது. பகல், 1:00 மணிக்கு பேரொளி வழிபாடு நடந்தது. இதில், திருவாவடுதுறை ஆதீன பேரூர் கிளை மடத்தின் மேலாளர் பாஸ்கர சேகரன், சதய விழா குழு சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us