ADDED : மே 19, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; ஆத்துபொள்ளாச்சியை சேர்ந்தவர் திருமூர்த்தி, 46, கூலித்தொழிலாளி. இவர், மீனாட்சிபுரம் செக்போஸ்ட் பகுதியில் லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திருமூர்த்தியிடம் விசாரித்ததில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. திருமூர்த்தியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 780 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.