/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில் மகர விளக்கு உற்சவம்
/
ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில் மகர விளக்கு உற்சவம்
ADDED : ஜன 15, 2024 10:32 PM

பாலக்காடு;பாலக்காடு மேற்கு யாக்கரை ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில், மகர விளக்கு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கேரள மாநிலம், பாலக்காடு நகர் அருகே உள்ள மேற்கு யாக்கரை ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில், ஆண்டுதோறும் மகர விளக்கு உற்சவம் நடக்கிறது. நடபாண்டு உற்சவம் நேற்று காலை நடை திறப்புடன் துவங்கியது.
அதிகாலை, 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7:00 மணிக்கு மூலவருக்கு உஷபூஜை நடந்தது. காலை, 9:30 மணிக்கு செண்டை மேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த மூன்று யானைகளின் அணிவகுப்பில், புழக்கல் மகா கணபதி கோவிலில் இருந்து மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தம் எடுத்து வரும் வைபவம் நடந்தது.
அதன்பின், செண்டை மேள வித்வான் வட்டேக்காடு சசியின் தலைமையிலான, 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட 'பஞ்சாரி மேளம்' என அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்க, மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.
காலை, 11:00 மணிக்கு புஷ்பாலங்கார பூஜை, 12:00 மணிக்கு உச்சபூஜை, யானைகளுக்கு உணவளிக்கும் 'யானையூட்டு' நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலையில், செண்டை மேளம் முழுங்க யானைகள் அணிவகுப்புடன் 'பாலகொம்பு' எழுந்தருளல் நிகழ்ச்சி, விஸ்வேஸ்வரா கோவில் சன்னதியில் துவங்கி, சாஸ்தா கோவிலை வந்தடைந்தது. அதன்பின், ஐயப்பன் பாட்டு நிகழ்ச்சி நடந்தது.