ADDED : ஜன 20, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : பூமார்க்கெட் லங்கர்கானா சாலையிலுள்ள, ஸ்ரீ மல்லீஸ்வரி அம்மன் திருக்கோவில் தைத்திருவிழா, பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.
தைத்திருவிழா முனியப்பசாமி பூஜையுடன் கடந்த ஜன.,7ல் துவங்கியது. கடந்த 14ல் அலங்கார பூஜையும், தோப்புக்கு சென்று அம்மனை வழிபடும் நிகழ்ச்சி யும் நடந்தது. நேற்று வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை 6:00 க்கு, அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.