ADDED : பிப் 17, 2025 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; கரியாம்பாளையம், லட்சுமி நகரில், 50 குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்கு புதர் மண்டி இருந்த பகுதியை பொக்லைன் இயந்திரம் வாயிலாக சுத்தப்படுத்தினர். நிலத்தை தோண்டும் போது ஒன்றரை அடி ஆழத்தில் மல்லீஸ்வரர் என்று அழைக்கப்படும் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர் லட்சுமி நகர் மக்கள். அந்தப் பகுதியிலேயே மல்லீஸ்வரர் சிலைகளை பிரதிஷ்டை செய்து தினமும் வழிபட்டு வருகின்றனர். இப்பகுதியில் மல்லீஸ்வரருக்கு கோயில் எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

