ADDED : மே 04, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர், ;கோவை, சுந்தராபுரம் அடுத்து பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி, 41. இவரது சகோதரி காயத்ரி அதே பகுதியில் வசிக்கிறார். சம்பவத்தன்று இவரது வீட்டினருகே வசிக்கும். இருவர் போதையில் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து காயத்ரி தனது சகோதரி ஈஸ்வரிக்கு தகவல் கூறினார். ஈஸ்வரி அங்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களிடம் விசாரித்தார்.
ஆத்திரமடைந்த இருவரும் அவரை மரக்கட்டை, கல்லால் தாக்கியதில், தலையில் காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவரது புகாரில், சுந்தராபுரம் போலீசார் நாகராஜபுரம், துர்க்கை அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சக்திவேல், 27 என்பவரை கைது செய்தனர். லிங்கம், 25 என்பவரை தேடுகின்றனர்.