ADDED : ஜூன் 16, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்'; கோவை, குனியமுத்துார் அடுத்த பி.கே.புதூர், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் அர்ஜுனன், 55; குழப்பழக்கமுடையவர். தினமும் போதையில் மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். அதுபோல் கடந்த 12ம் தேதி, தான் புதியதாக கட்டும் வீட்டில் கட்டுமான பணி செய்வோருக்காக மது வாங்கி வந்தார்.
இதுகுறித்து, அவரது மனைவி சண்முகவல்லி கேட்டபோது தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அர்ஜுனன், அவரை திட்டி, மரக்கட்டையால் தாக்கினார். அவரது மகன் தடுத்துள்ளார்.
அர்ஜுனன் அங்கிருந்த அரிவாளை எடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். மகனை வெட்ட துரத்தினார். அவர் தப்பியோடினார்.
சண்முகவல்லி குனியமுத்துார் போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார் அர்ஜுனனை கைது செய்தனர்.