ADDED : பிப் 01, 2026 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்: கோவை, வெள்ளலூரில் இலங்கையை சேர்ந்த சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். இவர் இலங்கை செல்வதற்காக, பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார்.
ஆவணங்கள் சரிபார்க்க போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானது என தெரிந்தது. சிவகுமார் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர் குறித்த விசாரணையில், மாதம்பட்டி, பழனியாண்டவர்புதூரை சேர்ந்த வேலுசாமி மகன் சர்வேஷ் பிரசாந்த், 34 என தெரிந்தது, இதையடுத்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

