sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருமணம் செய்ய மறுத்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

/

திருமணம் செய்ய மறுத்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

திருமணம் செய்ய மறுத்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

திருமணம் செய்ய மறுத்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது


ADDED : பிப் 02, 2025 01:22 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை, டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவரை கோவை, சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், 38 என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பெண் அவர் வீட்டு முன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சந்திரசேகர், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அந்த பெண் கண்டித்தார். அப்போது, இருவருக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.

சந்திரசேகர் அப்பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பெண் வீட்டுக்குள் சென்று தனது சகோதரரிடம் நடந்ததை கூறினார். பெண்ணின் சகோதரர், சந்திரசேகரை தட்டி கேட்டார்.

அதற்கு அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காண்பித்து, இருவரையும் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.

சம்பவம் தொடர்பாக, அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சந்திரசேகரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us