/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., கால்வாயில் தவறி விழுந்தவர் பலி
/
பி.ஏ.பி., கால்வாயில் தவறி விழுந்தவர் பலி
ADDED : ஏப் 06, 2025 09:57 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி., கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே சுப்பேகவுண்டன்புதுார் பகுதியில் பி.ஏ.பி., கால்வாய் செல்கிறது. இக்கால்வாயில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றினர். விசாரணையில், இறந்தவர், அதேபகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பதும் தெரிந்தது. கடந்த, 2ம் தேதி பணிக்கு சென்று, வீடு திரும்பும் போது, மது அருந்தி செல்லும்போது, கால்வாயில் தவறி விழுந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதி செய்து விசாரித்து வருகின்றனர்.

