/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி சந்தை செயலியால் ரூ.60 லட்சத்தை இழந்தவர்
/
போலி சந்தை செயலியால் ரூ.60 லட்சத்தை இழந்தவர்
ADDED : டிச 28, 2024 01:29 AM
கோவை: கோவை, தடாகம் சாலை, ஜி.சி.டி., பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் பழனிசாமி, 53, தனியார் நிறுவன ஊழியர். இவரின் மொபைல் போனுக்கு, பங்கு சந்தை முதலீடு குறித்து வந்த விளம்பரத்தில், தங்கள் நிறுவனத்தின் வாயிலாக பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, குறிப்பிட்டிருந்தது.
செல்வகுமார் அந்த, 'லிங்க்'ஐ கிளிக் செய்து, 'ஆக்சிஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குரூப்' என்ற 'வாட்ஸாப்' குழுவில் சேர்ந்தார். அதன் பின், செல்வகுமாரை தொடர்பு கொண்ட அக்குழு, 'அட்மின்', ஆக்சிஸ் செக்யூரிட்டி லிமிடெட்' என்ற 'ஆப்'க்கான லிங்கை அனுப்பினார். இதன் வாயிலாக தாங்கள் கூறும் வகையில் டிரேடிங் செய்தால், அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.
அதை உண்மை என நம்பிய செல்வகுமார், நவ., 5ம் தேதி அந்த, 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்து, 59 லட்சத்து 93,000 ரூபாயை, பலமுறை முதலீடு செய்தார். பின், பணத்தை எடுக்க முயற்சித்த போது முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வகுமார், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

