/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.64 கோடி மோசடி தேடப்பட்டவர் கைது
/
ரூ.1.64 கோடி மோசடி தேடப்பட்டவர் கைது
ADDED : ஜூன் 23, 2025 04:27 AM

கோவை: மகளிர் சுய உதவிக்குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, ரூ.1.64 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவை ஊஞ்சவேலாம்பட்டி பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் புவியரசு, 36. இவரது உறவினர் பரிமளா, 55. அவர் கணவர் பூமிநாதன், 57. தம்பதியின் மகள் ரம்யா, 37. அவரது கணவர் நாகராஜன், 48. கடந்த, 2023ம் ஆண்டு புவியரசை தொடர்பு கொண்ட ரம்யா தான் மகளிர் சுய உதவிக்குழு துவங்க உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, புவியரசுவிடம் தெரிவித்தார். இதை நம்பிய புவியரசு, கடந்த, மார்ச், 2023 முதல், டிச., 2023 வரையிலான காலத்தில், பல்வேறு கட்டங்களாக, ரூ.1.64 கோடியை முதலீடு செய்தார்.
துவக்கத்தில் முதலீட்டுக்கு லாபம் தந்த ரம்யா அதன்பின் பணம் தரவில்லை. இதையடுத்து முதலீடு செய்த தொகையை திரும்பத் தர வலியுறுத்தினார். ஆனால், ரம்யா பணம் தரவில்லை. இதுகுறித்து கேட்ட போது, ரம்யா, நாகராஜ், பரிமளா, பூமிநாதன் ஆகியோர் புவியரசு மற்றும் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து புவியரசு கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கில் தேடப்பட்டு வந்த நாகராஜ், 48 என்பவரை நேற்று கைது செய்தனர்.