/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் குளிப்பதை படம் எடுத்தவருக்கு சிறை
/
பெண் குளிப்பதை படம் எடுத்தவருக்கு சிறை
ADDED : டிச 21, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சரவணம்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். கடந்த 19ம் தேதி அப்பெண், வீட்டு பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, பின் வீட்டில் வசிக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த பாலமுருகன், 21 என்ற வாலிபர் பெண் குளிப்பதை தனது மொபைலில், ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பெண் சத்தம் போட்டார். இதையடுத்து பாலமுருகன் தப்பி ஓடினார். அப்பெண் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.