/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறைக்குள் தீவிரவாத கொடி வரைந்தவர் ஆஜர்
/
சிறைக்குள் தீவிரவாத கொடி வரைந்தவர் ஆஜர்
ADDED : ஜூலை 08, 2025 10:04 PM
கோவை; சிறைக்குள் தீவிரவாத கொடி வரைந்தவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் அறையில், 2023,நவ., 27ல், சிறை வார்டன்கள் சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ., வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, ஈரோட்டை சேர்ந்த ஆசிப் முஸ்தகிர் பாக்கெட்டை சோதனையிட்ட போது, 'ஐ.எஸ்.ஐ. எஸ்' என்ற தீவிரவாத அமைப்பின் கொடியை, காகிதத்தில் கருப்பு மையால் வரைந்து வைத்திருந்தது தெரிய வந்தது.
சிறை அலுவலர்கள் கொடியை பறிமுதல் செய்த போது, மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார், ஆசிப் முஸ்தகிர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தது. ஆசிப் முஸ்தகிர் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, விசாரணை வரும் 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.

