/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்தவர் மரணம்
/
போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்தவர் மரணம்
ADDED : பிப் 03, 2025 12:10 AM
கோவை; கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம், சிவா நகரைச் சேர்ந்தவர் மணி பாரத், 19. இவர் மீது, திருட்டு, அடிதடி, கஞ்சா வழக்குகள் உள்ளன. இவரது தந்தை சேகர், 45; ஆட்டோ டிரைவர். கொலை வழக்கில் சிறை சென்று வந்தவர்.
கடந்த, 31ம் தேதி, கஞ்சா விற்றதாக மணி பாரத், அவர் நண்பர் ஜானகிராமன், 27, ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 108 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையறிந்த சேகர், நேற்று முன்தினம் காலை, கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில், 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

