/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரியில் பேட்டரி திருடியவர் கைது
/
லாரியில் பேட்டரி திருடியவர் கைது
ADDED : அக் 21, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே, டீச்சர்ஸ் காலனி கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ், 58. இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார்.
கடந்த 3ம் தேதி, சிவராஜ் தனது வீட்டில் முன்பு லாரியை நிறுத்திவிட்டு சென்றார். பின் 5ம் தேதி காலை லாரியை எடுக்க முற்பட்டார். அப்போது, லாரியில் இருந்த பேட்டரி திருடு போனது தெரியவந்தது. பேட்டரியை திருடியவர், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிஹரசுதன், 27, என தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் காரமடை போலீசார் அவரை கைது செய்தனர்.-

