sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மன்னீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா கோலாகலம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று பரவசம்

/

 மன்னீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா கோலாகலம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று பரவசம்

 மன்னீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா கோலாகலம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று பரவசம்

 மன்னீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா கோலாகலம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று பரவசம்


ADDED : ஜன 01, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில், 26ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று முன்தினம் மதியம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள் அருளுரை வழங்கினர்.

நேற்று காலை 7:15 மணிக்கு அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் தேருக்கு எழுந்தருளினார்.

காலை 10: 50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அவிநாசி, வாகிசர் மடம், காமாட்சி தாச ஏகாம்பரநாத சாமிகள், கூனம்பட்டி ஆதினம் ராஜ சரவண மாணிக்கவாசக சாமிகள், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மன்னீஸ்வரப் பெருமானுக்கு அரோகரா என்று பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பினர். ஓதிமலை ரோடு, தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு வழியாக கோவிலை தேர் அடைந்தது.

விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இன்று இரவு 7:00 மணிக்கு, குதிரை வாகனத்தில், சுவாமி திருவீதி உலாவும், நாளை இரவு 7:00 மணிக்கு தெப்போற்சவமும் நடக்கிறது.

மத நல்லிணக்க அன்னதானம்!

வழியெங்கும் ஏராளமான பக்தர்கள், மற்றும் பல்வேறு அமைப்புக்கள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், அல்லாஹ் பாக்ஸ், இப்ராஹிம், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.








      Dinamalar
      Follow us