/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தே.ஜ., கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வரவுள்ளன: வானதி
/
தே.ஜ., கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வரவுள்ளன: வானதி
ADDED : ஏப் 15, 2025 06:57 AM
கோவை; அடுத்த ஆறு மாதங்களில், தேசிய ஜனநாயக கூட்டணியில் நிறைய கட்சிகள் இணைய உள்ளதாக பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி: சட்டசபையில் நான் பேசும் பேச்சை, நேரடி ஒளிபரப்பு செய்யாமல் தடுக்கின்றனர்; பேசும் போது, ஒளிபரப்பை துண்டித்து விடுகின்றனர். சபாநாயகர் அப்பாவுவிடம், நான் பேசிய வீடியோ பதிவுகளை பல முறை கேட்டேன்; ஆனால், வழங்கவில்லை. அவருடைய செயல்பாடு திருப்திகரமாக இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி, தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் குறிக்கோளோடு செயல்படுகிறது. இக்கூட்டணியை பற்றி, பிற அரசியல் கட்சிகள், தேர்தல் நெருங்க நெருங்கத்தான் புரிந்து கொள்ளும். அடுத்த ஆறு மாதங்களில், இக்கூட்டணியில் ஏராளமான அரசியல் கட்சிகள் இணைய உள்ளன. எந்தெந்த அரசியல் கட்சிகள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறாரா என்பது குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன பதில் சொன்னாரோ, அது தான் என் பதிலும்.
இவ்வாறு வானதி கூறினார்.