ADDED : டிச 23, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : காரமடை மருதூர் அனுமந்தராய ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் மார்கழி மாத முதல் சனிக்கிழமை விழா நடந்தது.
காலையில் கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜைகள் நடந்தன. காலை, 11:00 மணிக்கு குத்து விளக்கு ஏற்றி, சனிக்கிழமை விழா துவங்கியது. கோவிலை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குழுவினர், பஜனை பாடல் கள் பாடினர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.