sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : ஏப் 25, 2025 11:40 PM

Google News

ADDED : ஏப் 25, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில், நேற்று திருவிழா நடந்தது.

கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில், கடந்த 15ம் தேதி திருவிழா நிகழ்ச்சி, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

கடந்த 21ம் தேதி, கம்பம் வெட்டி கிணற்றில் விடுதல், கம்பத்திற்கு பூஜை செய்து கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு மற்றும் கம்பம் நடுதல், பூ வளர்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

22ம் தேதி, வேண்டுதல் பூவோடு எடுத்தல் மற்றும் அம்மன் அழைக்கும் நிகழ்வு நடந்தது.

23ம் தேதி, அம்மன் அலங்காரம், மாவிளக்கு எடுத்து வருதல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து கம்பம் மற்றும் பூவோடு கிணற்றில் விடுதல் நிகழ்ச்சி நடந்தது. 24ம் தேதி, மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மன் ஊர்வலம் நடந்தது.

நேற்று, சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில், கிணத்துக்கடவு சுற்று வட்டார மக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பேரொளி வழிபாடு மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது.






      Dinamalar
      Follow us