/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செவ்வாழை, நேந்திரன் வாழைத்தார் விலை உயர்வு
/
செவ்வாழை, நேந்திரன் வாழைத்தார் விலை உயர்வு
ADDED : அக் 23, 2024 10:15 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், செவ்வாழை, நேந்திரன் வாழைத்தார் விலை கடந்த வாரத்தை விட உயர்ந்தது.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு, உள்ளூர் வாழைத்தார் வரத்து மட்டுமே இருந்தது. இதனால், விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.
மார்க்கெட்டில், தற்போது செவ்வாழை கிலோ - 70, நேந்திரன், 35 - 40; பூவன் 25 - 30; ரஸ்தாளி - 35, கதளி - 45, சாம்பிராணி வகை - 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை விட, ரஸ்தாளி மற்றும் பூவன் வகை வாழைத்தார்கள் கிலோவுக்கு, 5 ரூபாய் விலை குறைந்துள்ளது.
செவ்வாழை மற்றும் கதளி 10 ரூபாய், நேந்திரன் 8 முதல் 13 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'தினசரி மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வெளியூர் வரத்து இல்லை. உள்ளூர் வாழைத்தார் வரத்து மட்டுமே இருந்தது. இதனால், வரத்துக்கு ஏற்ப, வாழைத்தார் விலையில் மாற்றம் இருந்தது. மேலும், தீபாவளி பண்டிகை வருவதால் வரும் நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.

