/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறி தேர்வு
/
பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறி தேர்வு
ADDED : பிப் 09, 2026 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், கோவை மண்டல அறிவியல் மையம் சார்பில், கணித திறனறி தேர்வு நேற்று நடந்தது.
கோவை, திருப்பூர், திண்டுக்கல், பொள்ளாச்சி, உடுமலை, சேலம், கரூர் உள்ளிட்ட, 61 இடங்களில் தேர்வு நடந்தது. காலை 11:00 முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடந்தது. 9,637 பேர் தேர்வு எழுதினர்.
கணிதம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கும், இந்த தேர்வு நடத்தப்பட்டது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.

