/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத் தேர்வு குறித்து கலந்துரையாடிய மேயர்
/
பொதுத் தேர்வு குறித்து கலந்துரையாடிய மேயர்
ADDED : மார் 20, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட நரசாம்பதி குளம் அருகே, ரூ.33.60 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்துடன், ஆர்.எஸ்.புரம் அரசு மாதிரி பள்ளி வளாகத்தில் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகளும் கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை மேயர் ரங்கநாயகி நேற்று ஆய்வு செய்தார். பணிகளை தாமதமின்றி முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்திய அவர், பள்ளி மாணவ, மாணவியரிடம் பொதுத்தேர்வு குறித்து கலந்துரையாடினார்.
பயிற்றுவிப்பு முறை குறித்தும் கேட்டறிந்தார். உதவி செயற்பொறியாளர் சவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.