/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : நவ 11, 2024 07:07 AM
சூலுார் : சூலுாரில் நடந்த இலவச முகாமில், 109 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
சூலுார் வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், சார்பில், சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. 18 வயதுக்கு உட்பட்ட, 109 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், தேசிய அடையாள அட்டை, இலவச பஸ் பயண சலுகைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உதவி உபகரணங்கள் தேவைபடுவோருக்கு அளவீடுகள் எடுக்கப்பட்டன. அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆலோசனை மற்றும் பரிந்துரை வழங்கப்பட்டது.
மாவட்ட திட்ட அலுவலர், வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர் ( பொறுப்பு) பிரியா, வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உள்ள குறைகளை படிப்படியாக தீர்க்க முடியும். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்குகிறது.
பெற்றோர் அவர்களின் தனித்திறமையை அறிந்து அதை ஊக்குவிக்க வேண்டும்,என, முகாமில் வலியுறுத்தப்பட்டது.