sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குரும்பபாளையம் குளத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

/

 குரும்பபாளையம் குளத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

 குரும்பபாளையம் குளத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

 குரும்பபாளையம் குளத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்


ADDED : நவ 17, 2025 12:28 AM

Google News

ADDED : நவ 17, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: குரும்பபாளையம் குளத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், 30 ஏக்கர் பரப்பளவு உள்ள குரும்பபாளையம் குளம் உள்ளது. இந்த குளத்தில் மழை நீர் தேங்கினால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10 கிராமங்கள் பயன்பெறும்.

இந்த குளத்திற்கு மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து அதிக அளவில் மழைநீர் வருகிறது. அத்திக்கடவு திட்டத்தில் இந்த குளத்தை சேர்க்க இப்பகுதி மக்கள் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்த குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பாட்டில்கள், இறைச்சி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. குளத்திற்கு மழை நீர் வரத்து அதிகரிக்கும். இந்நிலையில் இந்த கழிவுகளால் குளத்தில் தேங்கும் நீர் எதற்கும் பயன்படாது. மாசுபடும். இத்துடன் அருகில் உள்ள தோட்டங்களிலும் நிலத்தடி நீரும் மாசுபடும். எனவே, குளத்தில் குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். குப்பை கொட்டுவோரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us