sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரயில் பயணம் பாதுகாப்பு; குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

/

 ரயில் பயணம் பாதுகாப்பு; குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

 ரயில் பயணம் பாதுகாப்பு; குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

 ரயில் பயணம் பாதுகாப்பு; குழந்தைகளுக்கு விழிப்புணர்வு


ADDED : நவ 17, 2025 12:28 AM

Google News

ADDED : நவ 17, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் சார்பில், ரயிலில் பயணம் செய்யும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கோவை வட்ட ரயில்வே இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமை தாங்கி பேசினார். சப் - இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தனியார் பவுண்டேஷன் டாக்டர் பமீலா கலந்து கொண்டு பேசியதாவது:-

நமது தனிப்பட்ட விவரங்களை அறிமுகம் இல்லாத நபர்களிடம் பகிரக்கூடாது. நமக்கு மற்றவர்களால் வரும் பிரச்சனைகளை எதிர்த்து நிற்க, மனதில் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் மனதில் உள்ள எண்ணங்களை மற்றவர்களிடம் கூறும்போது தான் நமக்குத் தேவையான உதவியை பெற முடியும். ரயிலில் பயணம் செய்யும்போது, ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் இன்றைய இளைஞர்கள் அதிக நேரமாக செல்போனில் காலத்தை கழித்து வருகின்றனர். இந்த பழக்கம் நமது எதிர்கால வாழ்க்கையை சீரழித்து விடும்.

எனவே செல்போனுக்கு அடிமையாவதை தவிர்த்து அதனை விட்டு வெளியே வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.----






      Dinamalar
      Follow us