sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டோரத்தில் மருத்துவ கழிவு குவிப்பு; பொதுச்சுகாதாரம் பாதிப்பு

/

ரோட்டோரத்தில் மருத்துவ கழிவு குவிப்பு; பொதுச்சுகாதாரம் பாதிப்பு

ரோட்டோரத்தில் மருத்துவ கழிவு குவிப்பு; பொதுச்சுகாதாரம் பாதிப்பு

ரோட்டோரத்தில் மருத்துவ கழிவு குவிப்பு; பொதுச்சுகாதாரம் பாதிப்பு


ADDED : மார் 23, 2025 10:50 PM

Google News

ADDED : மார் 23, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோட்டில் கழிவுநீர்


கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் புங்கமர தெருவில் ரோட்டின் நடுவே கழிவு நீர் வழிந்தோடுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, இதை ஊராட்சி நிர்வாகம் கவனித்து சரி செய்ய வேண்டும்.

- வசந்த், கிணத்துக்கடவு.

சர்வீஸ் ரோட்டில் குழி


கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் செல்லும் சர்வீஸ் ரோட்டின் நடுவே, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், ரோட்டை சீரமைக்க வேண்டும்.

-- செந்தில், கிணத்துக்கடவு.

ரோட்டில் சாகச பயணம்


பொள்ளாச்சி --- வால்பாறை ரோட்டில், பைக்கில் செல்பவர்கள் அதிவேகமாவும், சாகசம் செய்து கொண்டும் பயணிக்கின்றனர். இதனால், மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், விபத்து அபாயம் உள்ளது. இதை போலீசார் கவனித்து, அத்துமீறும் வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- டேவிட், பொள்ளாச்சி.

கரடு முரடான ரோடு


பொள்ளாச்சி -- கோவை ரோட்டில், நெடுஞ்சாலை அலுவலகம் அருகே ரோட்டின் நடுவில் கரடு முரடாக உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.

-- ரஞ்சித், பொள்ளாச்சி.

மருத்துவக்கழிவால் அவதி


நெகமம் அடுத்துள்ள, பச்சார்பாளையம் பகுதியில் ரோட்டின் ஓரத்தில் மருத்துவக்கழிவு கொட்டப்பட்டுள்ளது. இதனால், அங்கு பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை ஊராட்சி நிர்வாகம் கவனித்து, ரோட்டோரத்தில் மருத்துவக்கழிவு கொட்டும் மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கண்ணன், நெகமம்.

சிதிலமடைந்த நிழற்கூரை


உடுமலை, தாராபுரம் ரோடு சங்கர் நகர் நிழற்கூரை சிதிலமடைந்துள்ளது. அதை பயன்படுத்தும் பயணியருக்கு பாதுகாப்பில்லாமல் உள்ளது. இதனால் அவர்கள் திறந்த வெளியில் நின்று காத்திருக்கின்றனர். மழை காலத்தில் பஸ்சுக்கு காத்திருப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

- வேலுச்சாமி, உடுமலை.

தெருநாய்கள் தொல்லை


உடுமலை, புஷ்பகிரி வேலன் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மாலை நேரங்களில் ரோட்டில் நடைபயிற்சி செய்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களை நாய்கள் அச்சுறுத்துவதால் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

- சிவசாமி, உடுமலை.

சேதமடைந்த ரோடு


உடுமலை 100 அடி ரோட்டில் கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகன், உடுமலை.

சரக்கு வாகனங்கள் ஆக்கிரமிப்பு


உடுமலை, சத்திரம் வீதியில் காலை நேரங்களில் சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. அப்பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்வதற்கும் பெற்றோர் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வழியில்லாமல் இடையூறு ஏற்படுகிறது.

- வசந்தி, உடுமலை.

விதிமீறும் வாகனங்கள்


உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் விதிமுறைகளை மீறி பார்க்கிங் செய்யப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்படுகிறது. பஸ்கள் அவ்வழியாக சென்றுவருவதற்கும் இடையூறாக உள்ளது. குறிப்பாக நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் விதிமுறை மீறி நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமநாதன், உடுமலை.

காய்ந்த நிலையில் மரம்


உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் காய்ந்த நிலையில் மரம் உள்ளது. இது எந்நேரமும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, ரயில்வே அதிகாரிகள் இந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கந்தசாமி, உடுமலை.






      Dinamalar
      Follow us