ADDED : நவ 01, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், காங்., மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.
நகர காங்., தலைவர் செந்தில்குமார், மாநில வக்கீல் பிரிவு துணை தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.