sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டி துவக்கம்; 26 பள்ளிகளை சேர்ந்த 50 அணி வீரர்கள் களம் கே.எம்.சி.எச்., சிட்டி சென்டரில் சலுகை கட்டணத்தில் பரிசோதனை

/

ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டி துவக்கம்; 26 பள்ளிகளை சேர்ந்த 50 அணி வீரர்கள் களம் கே.எம்.சி.எச்., சிட்டி சென்டரில் சலுகை கட்டணத்தில் பரிசோதனை

ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டி துவக்கம்; 26 பள்ளிகளை சேர்ந்த 50 அணி வீரர்கள் களம் கே.எம்.சி.எச்., சிட்டி சென்டரில் சலுகை கட்டணத்தில் பரிசோதனை

ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டி துவக்கம்; 26 பள்ளிகளை சேர்ந்த 50 அணி வீரர்கள் களம் கே.எம்.சி.எச்., சிட்டி சென்டரில் சலுகை கட்டணத்தில் பரிசோதனை


ADDED : டிச 06, 2024 05:08 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோயம்புத்துார் சகோதயா ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டியில், 26 பள்ளிகளை சேர்ந்த, 50 அணிகள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

பீளமேடு, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், 45வது கோயம்புத்துார் சகோதயா ஹேண்ட்பால் போட்டிகள் நேற்றும், இன்றும் நடக்கிறது. ஆண்களுக்கான இப்போட்டியில், 26 பள்ளிகளை சேர்ந்த, 50 அணிகள் பங்கேற்றுள்ளன.

போட்டிகளை, நேஷனல் மாடல் பள்ளிகளின் குழும தாளாளர் மோகன் சந்தர் துவக்கிவைத்தார். 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், ஏர்போர்ஸ் பள்ளி மற்றும் பாரதிய வித்யா பவன் பள்ளியும் முதல் போட்டியில் விளையாடின. பரபரப்பான ஆட்டத்தில், 8-5 என்ற புள்ளி கணக்கில் ஏர்போர்ஸ் பள்ளி அணி வெற்றி பெற்றது.

இரண்டாம் ஆட்டத்தில், நேஷனல் மாடல் பள்ளி அணியும், மான்செஸ்டர் பள்ளி அணிகளும் மோதின. துவக்கம் முதலே துடிப்புடன் விளையாடிய நேஷனல் மாடல் பள்ளி வீரர்கள், 10-4 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.

அதேபோல், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு முதல் போட்டியில், வேல் சர்வதேச பள்ளியும், பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளியும் சந்தித்தன. இதில், 13-11 என்ற புள்ளி கணக்கில் வேல் சர்வதேச பள்ளி வெற்றி பெற்றது. இரண்டாம் ஆட்டத்தில் ஏ.ஆர்.வி., பள்ளி, 11-10 என்ற புள்ளி கணக்கில் வித்ய விகாஷ் பள்ளியை வென்றது. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.

'கோவை ராம்நகரில் உள்ள கே.எம்.சி.எச்., சிட்டி சென்டரில், வரும் 8ம் தேதி நடக்கும் வலிப்பு நோய் சிறப்பு மருத்துவ முகாமில், சலுகை கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர் டாக்டர் ராஜேஷ் சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

வலிப்பு நோய் என்பது, அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய மூளையில் ஏற்படும் ஒரு நரம்பியல் நோயாகும். இந்நோயால் உலகம் முழுவதும், 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூளையில் ஏற்படும் சீரற்ற அல்லது அசாதாரண மின்னதிர்வுகளால் வலிப்பு நோய் ஏற்படுகிறது. மூளையில் ஏற்படும் காயம், பக்கவாதம் மற்றும் பரம்பரையாக உள்ள குறைபாட்டாலும் வலிப்பு வரலாம். வலிப்பு வரும்போது பாதிக்கப்பட்டவரின் நடத்தை அசாதாரணமாக மாறிவிடும்; நினைவிழந்து விடுவர்.

எந்த வயதினருக்கும், எந்த பிரிவினருக்கும் இது ஏற்படலாம். ஆரம்ப நாட்களிலேயே இதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் எளிதில் குணப்படுத்தி விடலாம். 75 சதவீத வலிப்பு நோயை மருந்துகளாலேயே குணப்படுத்தி விடமுடியும். சில வகையான வலிப்பு நோய்களுக்கு மட்டும் அறுவை சிகிச்சை, உணவுப் பழக்க மாறுதல் உள்ளிட்ட சிகிச்சை தேவைப்படும்.

வலிப்பு நோயைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்க கே.எம்.சி.எச்.,ல் 'சி.டி., ஸ்கேன்', எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன், கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோயாளிகளுக்காக, வீடியோ இ.இ.ஜி., கருவி வசதியும் உள்ளது.

வலிப்பு நோயாளிகளுக்கான பிரத்யேக மருத்துவ முகாம் கே.எம்.சி.எச்., சார்பில், வரும் 8-ம் தேதி, நடக்கிறது. கோவை, ராம்நகரில் உள்ள கே.எம்.சி.எச்., சிட்டி சென்டரில் காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில், சலுகை கட்டணத்தில், பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us