sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பயன்பாட்டுக்கு வந்தது மனநல சிகிச்சை மையம்

/

பயன்பாட்டுக்கு வந்தது மனநல சிகிச்சை மையம்

பயன்பாட்டுக்கு வந்தது மனநல சிகிச்சை மையம்

பயன்பாட்டுக்கு வந்தது மனநல சிகிச்சை மையம்


ADDED : ஜூலை 27, 2025 11:02 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை அரசு மருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தனித்துவிடப்பட்டவர்களுக்கான மனநல சிகிச்சை மையம், பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

வீடற்று சாலையோரங்களில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு, சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த பிப்., மாதம், மாநில அளவிலான கொள்கையை வெளியிட்டது.

இதன்படி, சாலையோரங்களில் ஆதரவு இன்றி சுற்றித்திரிபவர்களை அடையாளம் கண்டு, அவசர சிகிச்சை, இடைநிலை மருத்துவ கவனிப்பு, நீண்டகால பராமரிப்பு, மறுவாழ்வு அளிக்கும் வகையில் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இம்மையம், கடந்த வாரம் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் துவங்கப்பட்டுள்ளன. தன்னார்வ அமைப்புகள் வாயிலாக மீட்கப்பட்ட, ஆறு பேர் தற்சமயம் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆறு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுபோன்று, சோபா, டி.வி., வாட்டர் ஹீட்டர், கேரம்போர்டு, செஸ் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உடை, உணவு அனைத்தும் இலவசமாக வழங்கி, தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பின்னர் உறவினர்களிடம் சேர்க்கவோ, இல்லங்களில் சேர்க்கவோ நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us