sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாரச்சந்தையை நாடும் மக்கள்; வசதி கோரும் வியாபாரிகள் !

/

வாரச்சந்தையை நாடும் மக்கள்; வசதி கோரும் வியாபாரிகள் !

வாரச்சந்தையை நாடும் மக்கள்; வசதி கோரும் வியாபாரிகள் !

வாரச்சந்தையை நாடும் மக்கள்; வசதி கோரும் வியாபாரிகள் !


ADDED : மே 26, 2025 05:34 AM

Google News

ADDED : மே 26, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவையில், திங்கள் முதல் ஞாயிறு வரை, வாரத்துக்கு ஒரு நாள் என்ற கணக்கில், ஒவ்வொரு பகுதியிலும் சந்தை போடப்படுகிறது.

ஒரே கூடாரத்தின் கீழ் அனைத்தும் கிடைப்பதால், அருகே வசிப்பவர்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கு இது அலைச்சலை தவிர்த்து, தேவையை பூர்த்தி செய்கிறது. அதுவும் அன்றைய தினம் 'பிரெஷ்' ஆகவும், மார்க்கெட்டில் கிடைப்பதை விட சற்று குறைந்த விலையிலும் கிடைப்பதால் மக்கள் மட்டுமின்றி, கடை வியாபாரிகளும் அடித்துப்பிடித்து வாங்குவதுண்டு. புலியகுளம், ராமநாதபுரம் அருகே மருதுார், ஒலம்பஸ் அருகே, 80 அடி ரோடு, காந்திமாநகர், கணபதி அத்திபாளையம் பிரிவு, வேடபட்டி அருகே குரும்பபாளையம், வடவள்ளி, விளாங்குறிச்சி, எல்.ஐ.சி.,காலனி, மாச்சம்பாளையம், சிங்காநல்லுார் அடுத்த ஆனையங்காடு ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலம் அருகே என, மாநகரின் முக்கிய இடங்களில் இச்சந்தை நடக்கிறது.

இதனால், போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. மழைக் காலத்தில் வியாபாரிகள் மட்டுமின்றி, பொது மக்களும் சேறும், சகதியும் மிக்க இடங்களில் அமைந்துள்ள வாரச்சந்தைகளால் அவதிப்படுகின்றனர். இச்சூழலில், பள்ளி விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில், விடுமுறை நாட்களில் வாரச்சந்தைகள் அமைக்க மாநகராட்சி அனுமதித்தால், மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு குறையும். தங்குதடையின்றி வியாபாரமும் நடக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.






      Dinamalar
      Follow us